முடியல…. காங்கிராஸ் ஆதரவு இல்லாமல் திராவிட கட்சிகள் வெல்ல முடியாது-கார்த்திக்சிதம்பரம்
0 Comments
ஒரு கட்சில ஒம்பத்திரெண்டு தலைவரு… இந்த லட்சணத்தில… பல காலமா திராவிட கட்சி மேல சவாரி பண்ணியே அரசியல் நடத்தியாச்சு… ஆட்சிக்கு வந்து மட்டும் என்ன கிழிக்கபோறீங்க… கருணாநிதியும் ஜெவும் மிச்சம் வைத்திருக்கிற… இருக்கா இல்லையானு தெரியல… அதையும் கொள்ளை அடிப்பீங்க… ஒங்களுக்கு என்ன சார் குறைச்சல் இளவரசன் கணக்கா வாழ்க்கை வாழ்றீங்க…இந்தியாவே… உங்களுக்கு சொந்தம்… கொஞ்சம் நஞ்சம் தமிழருக்கு இருந்த உணர்ச்சியையும் திராவிட இனம்னு கருணாநிதி போட்ட வேசத்தில இன்னைக்கு வரைக்கும் யாரும் எழுந்திருக்க முடியல…
இப்ப கடுமையான விவாதம் நடந்துக்கிட்டிருக்கும் அறிவாலயத்துல…அடுத்த தேர்தல்ல மக்களை எப்படி தெளிய தெளிய வயத்துல அடிக்கலாம்னு…முதல்ல காங்கரஸ் ஆட்சி நடக்குற மாநிலத்துல கவனம் செலுத்துங்க…அத விட்டுட்டு எவனப்பாத்தாலும்… ஆட்சிய பிடிப்போம் ஆட்சிய பிடிப்போம்னு அறிக்கை விடறதும் மேடைல கூவறதும் ….இதே வேலைய போச்சு… உழைக்கும் மக்களுக்கு ரெண்டு பக்கமும் பிரச்சனை ஒன்னு முதலாளிங்க…இன்னொன்னு இந்த அரசியல்வாதிங்க… நாட்டுக்கு கேடு தர இலவசத்தை நிறுத்தனும் முதல்ல… வேலைய கொடுங்கடான்னு சொன்ன T.V தருகிறார்கள்…இப்ப ஒட்டுக்கு பணம் வேற… என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் எப்ப பார்த்தாலும் தேர்தல் பத்தி தான் பேச்சு… இவங்களுக்கு பணம் பிரச்சனை இல்லை… அதிகாரம் அந்த காரத்துக்கு தான் அலையா அலைரானுங்க…